பள்ளியில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த 47 வயது சிங்கப்பூர் ஆசிரியர் கைது

 

பள்ளியில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த 47 வயது சிங்கப்பூர் ஆசிரியர் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த 47 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த 47 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இவ்வாறு 2015 முதல் 2018 வரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறுமிகளை படம்பிடித்து 168 வீடியோக்களை வைத்திருந்தார். மொத்தம் 69 சிறுமிகளை அந்த ஆசிரியர் ஆபாசமாக படம்பிடித்து தனது மொபைலில் வைத்திருந்தார்.

பள்ளியில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த 47 வயது சிங்கப்பூர் ஆசிரியர் கைது

அவர் கற்பித்த பள்ளியில் சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்து மட்டுமில்லாமல் 2017-ஆம் ஆண்டு ஒரு பெண் உறவினரையும் ஆபாசமாக படம்பிடித்துள்ளார். அதேபோல ஒரு மாலில் முன்பின் தெரியாத பெண்ணையும் ஆபாசமாக படம்பிடித்து வைத்திருந்தார். ஜூலை 14-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

கல்வி அமைச்சின் (MOE) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அவர் இனி எந்தப் பள்ளியிலும் கற்பிக்கவில்லை, ஜூலை 2018 முதல் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரின் குற்றம் நிரூபிக்கபட்டால் அதிக ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.