கோடையில் சருமத்தைக் காக்க எளிய வழிமுறைகள்!

 

கோடையில் சருமத்தைக் காக்க எளிய வழிமுறைகள்!

கோடை… வெயில் காலங்களில் சருமங்களில் பல பிரச்சினைகள் வந்துபோகும். சிலருக்கு சிறிய பிரச்சினை பெரிய தலைவலியை தரலாம். ஆகவே, இவற்றையெல்லாம் மிக எளிமையான முறைகளில் சரிசெய்துவிடலாம். அதுகுறித்து பார்ப்போம்.

கோடையில் சருமத்தைக் காக்க எளிய வழிமுறைகள்!
ன்ஸ்க்ரீன்:
வெயிலில் அலைவதால் முகம் கறுத்துப்போகும். இதற்கு என்னதான் சன்ஸ்க்ரீன் லோஷன், பவுடர்கள் என்று போட்டுக்கொண்டாலும், முகம் கறுத்துப்போவதைத் தவிர்க்கவே முடியவில்லை என்று நொந்துகொள்வார்கள். ஆனால், அந்தக் காலத்து பெண்கள் பெரிய சிரமங்கள் எதுவுமில்லாமல் இருந்தது எப்படி என்ற ஆச்சர்யத்துக்குப் பதில் ஒன்றே ஒன்றுதான். அவர்கள், செயற்கையாக எதையும் பயன்படுத்தவில்லை. வெறும் மஞ்சள், சந்தனம், கடலைமாவு போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். இதுதான் அவர்களது அழகுக்குக் காரணமாக அமைந்தது. அப்போதெல்லாம் சோப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

தூய்மையான சந்தனம் மற்றும் மஞ்சள் கலந்த கலவை, உங்கள் சருமத்தை வெகுவாகப் பாதுகாத்து மின்னச்செய்யும். பன்னீர் கலந்த ரோஜா மலர்களின் கூழ், உங்கள் முகத்தை சில்லென புதிதாக மாற்றும். பால்பவுடர், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்த கலவை முகத்துக்கு மினுமினுப்பை அளிக்கும். பச்சை உருளைக்கிழங்குத் துண்டுகள், வெள்ளரித்துண்டுகளை முகத்தில் வைத்துக்கொண்டால், நல்ல நிறத்தை கொடுக்கும். சோற்றுக் கற்றாழையின் ஜெல் பகுதியை அரைத்து முகத்தில் தடவலாம். திருநீற்றுப்பச்சிலை அல்லது அம்மான்பச்சரிசி இலைகளை அரைத்துப் பூசினால் முகப்பருக்கள் உதிர்ந்துவிடும்.

கோடையில் சருமத்தைக் காக்க எளிய வழிமுறைகள்!
வழவழப்பு:
ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர் சேர்ந்த பேக், முகத்தைப் பொலிவாக்கும். துளசி அல்லது புதினா பேஸ்ட்டை முகத்தில் தடவ, கறுமையை நீக்கி சருமத்தை அழகாக்கும். கெட்டியான பாலில் குங்குமப்பூ கலந்து தடவ, முகம் வெண்மையாகும். மஞ்சள் மற்றும் தக்காளி பேஸ்ட், முகத்தை வழவழப்பாக்கும்.

கோடையில் சருமத்தைக் காக்க எளிய வழிமுறைகள்!கடலை மாவு, பால் அல்லது கடலை மாவு பன்னீர் கலவை உங்கள் முகத்தின் மாசுக்களை நீக்கி புதிய பொலிவைத்தரும். வாழை, பப்பாளி பழங்களின் கூழும் முகத்துக்கு அழகைக் கொடுக்கும். பாதாம் எண்ணெய் மசாஜ் முகத்துக்கு நல்லது. இவற்றைத் தவிர, வெயில் காலங்களில் நான்கு முறை குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் போதும். எப்போதும் பளிச்சென்று இருக்கும்.