திண்டல் கோயிலில் எளிமையாக நடந்த திருக்கல்யாண உற்சவம்
Nov 21, 2020, 21:42 IST1605975178000
ஈரோடு
ஈரோடு மாவட்டம் திண்டல் முருகன் கோயிலில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து எளிமையான முறையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டல் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை அதிகாலை முருகப் பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி கோயிலில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும நடைபெற்றது. இதில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.