திருப்பதியில் சாமி தரிசனம் : புதிய கெட்டப் தெரியாமல் இருக்க முகத்தை மூடி சென்ற நடிகர் சிம்பு

 

திருப்பதியில்  சாமி  தரிசனம் : புதிய கெட்டப் தெரியாமல் இருக்க முகத்தை மூடி சென்ற நடிகர் சிம்பு

திருப்பதிக்கு வந்த சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிட கூடாது என முகத்தை மூடி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பதியில்  சாமி  தரிசனம் : புதிய கெட்டப் தெரியாமல் இருக்க முகத்தை மூடி சென்ற நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு நேற்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். ரூ.300-க்கான டிக்கெட் வாங்கி ஏழுமலையானை தரிசனம் செய்த சிம்பு கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றதுடன், புகைப்படமும் எடுக்க முயன்றனர். அப்போது தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சிம்பு முகத்தை மூடியபடி காரில் ஏறி சென்றுள்ளார்.

திருப்பதியில்  சாமி  தரிசனம் : புதிய கெட்டப் தெரியாமல் இருக்க முகத்தை மூடி சென்ற நடிகர் சிம்பு

கடந்த ஆண்டு நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்தாகின. தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில்  சாமி  தரிசனம் : புதிய கெட்டப் தெரியாமல் இருக்க முகத்தை மூடி சென்ற நடிகர் சிம்பு

இதனிடையே சுசீந்திரன் – சிம்பு கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது . இதற்காக சிம்பு 20 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும் இயக்குநருமான பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இந்த படப்பிடிப்பு தளத்தில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.