சிறுமிக்கு நீதி வேண்டி மௌன அஞ்சலி போராட்டம்

 

சிறுமிக்கு நீதி வேண்டி மௌன அஞ்சலி போராட்டம்

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலையானதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மௌன அஞ்சலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட

சிறுமிக்கு நீதி வேண்டி மௌன அஞ்சலி போராட்டம்

தொழிலாளர்கள் கலந்துகொண்டு, சிறுமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.