விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: எஸ்.ஐ பணியிட மாற்றம்!

 

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: எஸ்.ஐ பணியிட மாற்றம்!

பேரையூர் அருகே இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சாப்டூர் காவல்நிலைய எஸ்.ஐ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். இவரது அண்ணன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை பற்றி விசாரணை நடத்த போலீசார், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரமேஷை சாப்டூர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். பின்னர், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத ரமேஷ் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய படி, சடலமாக மீட்கப்பட்டார். இதனால் சாப்டூர் காவலர்கள் தான் ரமேஷை கொலை செய்து தூக்கு மாட்டி விட்டதாக அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: எஸ்.ஐ பணியிட மாற்றம்!

இதனையடுத்து ரமேஷின் மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், எஸ்.ஐ ஜெயக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகும் அந்த காவலர்களை கைது செய்யக்கோரி 2ம் நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்: எஸ்.ஐ பணியிட மாற்றம்!

இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாப்டூர் எஸ்.ஐ ஜெயக்கண்ணனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி அம்மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மற்ற காவலர்கள் மீது விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.