இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் முக்கிய இந்திய வீரர்? ஐபிஎல் கேப்டனாக செயல்படுவதும் சந்தேகம்!

 

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் முக்கிய இந்திய வீரர்? ஐபிஎல் கேப்டனாக செயல்படுவதும் சந்தேகம்!

இந்தியா-இங்கிலாந்து இடையே மூன்று விதமான தொடர்கள் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங் செய்த ஸ்ரேயாஷ் ஐயரின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பெவிலியன் திரும்பி சிகிச்சை மேற்கொண்டார்.

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் முக்கிய இந்திய வீரர்? ஐபிஎல் கேப்டனாக செயல்படுவதும் சந்தேகம்!

இச்சூழலில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் இடது தோள்பட்டை இடமாறியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு போட்டிகளில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் அல்லது கில் இருவரில் யாரோ ஒருவர் அவரிடத்தில் ஆடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் முக்கிய இந்திய வீரர்? ஐபிஎல் கேப்டனாக செயல்படுவதும் சந்தேகம்!

காயத்திலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் பிடிக்கும் என்பதால் ஐபிஎல் தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ஸ்ரேயாஷ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். டாப் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். இதனால் அவர் ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வரை யார் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.