சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

 

சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 17 கிலோ தங்கம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரயில்வேரோட்டில் வசித்து வரும் நகை வியாபாரி தன்ராஜ் வீட்டுக்குள் புகுந்த 3 வடமாநில கொள்ளையர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலில் தன்ராஜ் மற்றும் மருமகள் நிக்கில் படுகாயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் 17கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சீர்காழியில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

இந்நிலையில் சீர்காழியில் தங்க நகைகளை கொள்ளையடித்த மூவரில் ஒருவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு பேரை கொன்று கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எருக்கூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுன்டர் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற 2 கொள்ளையர்களை கைது செய்து 17 கிலோ தங்க நகைகள், இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.