விருதுநகரில் 6 ஆம் தேதி முதல் மாலை 3 மணி வரையே கடைகள் இயங்கும்!

 

விருதுநகரில் 6 ஆம் தேதி முதல் மாலை 3 மணி வரையே கடைகள் இயங்கும்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,721 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னையில் மேலும் 2,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்தது. மேலும், மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டுமே 63.31% பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகரில் 6 ஆம் தேதி முதல் மாலை 3 மணி வரையே கடைகள் இயங்கும்!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மக்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குப் புலம் பெயர ஆரம்பித்த நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு பன்மடங்காக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

விருது நகரில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு பரவியதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 807 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரும் 6 ஆம் தேதி முதல் விருதுநகரில் மாலை 3 மணி வரையிலேயே வணிக நிறுவனங்கள் இயங்கும் என்று வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.