தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் 27 ஆம் தேதி வரை கடை அடைப்பு!

 

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் 27 ஆம் தேதி வரை கடை அடைப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் 27 ஆம் தேதி வரை கடை அடைப்பு!

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2261 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் ஜூலை 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கடைகள் அடைக்கப்போவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.