குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடை உரிமையாளர் பலி!

 

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடை உரிமையாளர் பலி!

கரூர்

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் அங்குள்ள இரட்டை வாய்க்கால் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணாகி மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் கடையின் அருகே உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு கூரை அமைப்பதற்காக செல்வராஜ் இரும்பு குழாயை தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தார்.

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடை உரிமையாளர் பலி!

அப்போது, எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி, மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில், செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு செல்வராஜை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த லாலபேட்டை போலீசார், செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.