அமெரிக்காவாக மாறும் தமிழகம்! கள்ளக்குறிச்சியில் மற்றொரு துப்பாக்கிச்சுடு

 

அமெரிக்காவாக மாறும் தமிழகம்! கள்ளக்குறிச்சியில் மற்றொரு துப்பாக்கிச்சுடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சிருபனையூர் தக்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் அனிப் என்பவரது மகன் ஹாரூன்(40), வீட்டில் இருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை கொண்டு, அதே பகுதியை சேர்ந்த பாஷாவின் மகன் சான்(45) என்பவரை சுட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவாக மாறும் தமிழகம்! கள்ளக்குறிச்சியில் மற்றொரு துப்பாக்கிச்சுடு

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சானை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பாலப்பந்தல் போலிசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சானை ஹாரூன் எதற்காக சுட்டு கொன்றார், எப்படி அவரிடம் துப்பாக்கி வந்தது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.