“கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்” -பெற்ற தாயால் கழுத்து வெட்டப்பட்டு பாத்ரூமில் கிடந்த சிறுவன்.

 

“கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்” -பெற்ற தாயால் கழுத்து வெட்டப்பட்டு பாத்ரூமில் கிடந்த சிறுவன்.


தான் பெற்ற மகனையே கடவுள் கேட்கிறார் என்று கூறி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தார்கள்.

“கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்” -பெற்ற தாயால் கழுத்து வெட்டப்பட்டு பாத்ரூமில் கிடந்த சிறுவன்.


கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் புலக்காட்டில் வசிக்கும் 30 வயதான ஷஹீதா என்ற பெண் தன்னுடைய கணவர் மற்றும் ஆறு வயதான மகன் அமில் உடன் வசித்து வந்தார் .அவர் இப்போது கர்ப்பிணியாகியிருந்தார் ,அவரின் கணவர் சுலைமான் அரபு நாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது டிரைவராக இருக்கிறார் .அந்த பெண் ஷஹீதா தற்போது ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிகிறார் .
இந்நிலையில் அந்த பெண் ஷகீதாவுக்கு மதப்பற்று அதிகம் .அவர் வணங்கும் அல்லாஹ்வின் மீது அதிக இறை நம்பிகையுடையவர் .அதனால் அவர் அடிக்கடி தன்னுடைய மகனை கடவுள் காணிக்கையாக கேட்கிறார் என்று கூறி வந்துள்ளார் .அதனால் அவரை திருப்திப்படுத்த மகனை அவருக்கு காணிக்கை யாக்க போகிறேன் என்று கூரியபடி இருந்துள்ளார் .அவரின் கணவர் இதை கேட்டு அவர் ஏதோ விளையாட்டுக்கு கூறுகிறார் என்று அலட்சியமாக இருந்துள்ளார்
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த வீட்டில் அவரின் கணவர் வேறொரு அறையிலும், அந்த பெண் ஷகீதாவும் அவரின் ஆறு வயது மகன் மற்றொரு அறையிலும் தூங்கிக்கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த இரவில் அந்த பெண் எழுந்து ,தன்னுடைய மகனை அங்குள்ள பாத்ரூமிற்கு கூட்டிச்சென்று அவரின் கழுத்தை வெட்டி கொன்றுவிட்டார் .பின்னர் அவரே காவல் நிலையத்திற்கு போன் செய்து இந்த கொலை பற்றி கூறினார் .அதை கேட்டு அதிர்ந்த போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்தார்கள் .இது பற்றி போலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகிறார்கள் .

“கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்” -பெற்ற தாயால் கழுத்து வெட்டப்பட்டு பாத்ரூமில் கிடந்த சிறுவன்.