‘மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை’ – மூவர் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்!

 

‘மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை’ – மூவர் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்!

சென்னை சவுகார்பேட்டை கொலை வழக்கில், கைதான குற்றவாளிகள் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த 11ம் தேதி சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தலீல் சந்த், மகன் ஷீத்தல் மற்றும் தாய் புஷ்பா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலையை ஷீத்தலின் மனைவி ஜெபமாலா அவருடன் சகோதரர்களுடன் இணைந்து, திட்டமிட்டு நடத்தினார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றவாளிகள் ஜெபமாலாவையும் அவரது சகோதரர்களையும் போலீசார் கைது செய்தனர்.

‘மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை’ – மூவர் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்!

அவர்களை 10 நாட்கள் போலீசார் காவலில் எடுத்திருக்கும் நிலையில், இந்த கொலை தொடர்பான பல தகவல்கள் வாக்குமூலமாக பெறப்பட்டுள்ளது. தலீல் சந்த் ஜெபமாலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனை ஷீத்தல் கண்டும் காணாமல் இருந்ததாகவும் ஜெபமாலா ஷீத்தலிடம் கூறியும் அவர் அதனை பொருட்படுத்தாததால் குடும்பத்துடன் தீர்த்துக்கட்டியதாகவும் குற்றவாளிகளுள் ஒருவரான ஜெபமாலாவின் அண்ணன் தெரிவித்துள்ளார்.

‘மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை’ – மூவர் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்!

மேலும், நாட்டுத் துப்பாக்கியையும் முன்னாள் விமானப்படை அதிகாரியின் துப்பாக்கியையும் கொலைக்கு பயன்படுத்தியதாகவும் தனது சகோதரரின் மூலமாக அந்த துப்பாக்கி கிடைத்ததாகவும் கூறியுள்ளார். 10 நாட்கள் விசாரணையில் முடிவில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.