“ஒரு பொண்ண போட்டுட்டா,உன் அக்கவுன்ட்ல பணம் போடுறோம்”-ஆன்லைனில் சிறுவர்களை குறிவைக்கும் கூட்டம்

 

“ஒரு பொண்ண போட்டுட்டா,உன் அக்கவுன்ட்ல பணம் போடுறோம்”-ஆன்லைனில் சிறுவர்களை குறிவைக்கும் கூட்டம்


ஒரு ஆன்லைனில் விளையாட்டின் டாஸ்க்கில் சிக்கிய சிறுவன்,அவரின் வீட்டருகே வசித்த பெண்ணை கத்தியால் குத்தியதால் போலீசார் அவரை தேடி வருகிறார்கள் .

“ஒரு பொண்ண போட்டுட்டா,உன் அக்கவுன்ட்ல பணம் போடுறோம்”-ஆன்லைனில் சிறுவர்களை குறிவைக்கும் கூட்டம்


உத்தரகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனின் படேல் நகர் பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுவன் எந்நேரமும் ஆன்லைனில் அரட்டையடிக்கும் பழக்கமுள்ளவன் .இந்நிலையில் அந்த சிறுவன் டிஸ்கர்ட் என்ற ஒரு வெப் தளத்தில் ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஒருவருடன் பழகியுள்ளார் .அந்த டிஸ்கார்ட் தளத்தின் நோக்கம் என்னவென்றால் அதற்குள் வரும் மைனர் சிறுவர்களிடம் ஒருவரை கொலை செய்யவோ ,அல்லது தற்கொலை செய்து கொல்லவோ ஓர் டாஸ்க் கொடுப்பார்கள் அந்த டாஸ்க்கை அவர்கள் நிறைவிவேற்றிவிட்டால் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் .அப்படி அவர்களை டாஸ்க்கை நிறைவேற்றும் விதமாக அவர்களை மூளை சலவை செய்வார்கள் .
அதன் வலைத்தளத்திற்குள் அந்த சிறுவன் சிக்கிவிட்டான் .அதன்படி அந்த தளத்தில் உள்ளவர் அந்த சிறுவனுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் .அந்த டாஸ்க் படி நேரு நகரிலிருக்கும் ஒரு பெண்ணை கத்தியால் கொலை செய்ய வேண்டும் என்பதே அந்த டாஸ்க் ஆகும் .அதன் படி அந்த சிறுவன் நேரு காலனியில் வசித்த ஒரு பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவக்கிவிட்டான் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது .பின்னர் அந்த சிறுவனை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் அந்த சிறுவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது அவன் அந்த டிஸ்கார்ட் தளத்தின் டாஸ்க்கில் சிக்கியதை கண்டுபிடித்தார்கள் .பின்னர் அந்த சிறுவனை போலீசார் வலை வீசி தேடினார்கள்
இப்போது சிறுவன் இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் இருப்பதாவும், விரைவில் அவன் கைது செய்யப்படுவானென்றும் போலீசார் கூறினார்கள் .

“ஒரு பொண்ண போட்டுட்டா,உன் அக்கவுன்ட்ல பணம் போடுறோம்”-ஆன்லைனில் சிறுவர்களை குறிவைக்கும் கூட்டம்