“குண்டான மனைவியால் காண்டான கணவன்”- போலீசில் போட்டுக்கொடுத்த பொண்டாட்டி

 

“குண்டான மனைவியால்  காண்டான கணவன்”- போலீசில் போட்டுக்கொடுத்த பொண்டாட்டி

தான் குண்டாக இருப்பதாக கூறி தன்னை தினமும் கொடுமைப்படுத்துவதாக ஒரு மனைவி தன்னுடைய கணவன் மீது போலீசில் புகார் கூறியுள்ளார்

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் ஒரு இளம் பெண் நிறைய சீர் வரிசை மற்றும் நகைகளோடு
2017 ம் ஆண்டு வாஸ்னாவில் வசிக்கும் லலித்தை திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் திருமணத்தின் ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த மனைவிக்கு திடீரென உடல் பருமன் ஏற்பட்டது .இதனால் அந்த கணவனுக்கு அந்த மனைவியை பிடிக்காமல் போனது .
அதனால் தினமும் அந்த மனைவியை ‘குண்டு குண்டு’ என்று கிண்டலடித்தும், அவரை வெறுத்து ஒதுக்கியும் வந்துள்ளார் .இதனால் கடும் மன உளைச்சளுக்கு ஆளான அந்த மனைவி ‘ஏன் இப்படி என்னை வெறுத்து ஒதுக்குகிறீர்கள்’ என்று கேட்ட போது ,’இந்த குண்டு உடம்பு பொண்டாட்டியோடு குடும்பம் நடத்தணும்னா உங்க வீட்டில் சென்று இன்னும் நிறைய நகைகள் வாங்கி வா’ என்று கொடுமை படுத்தியுள்ளார் .’ஏற்கனவே நிறைய சீர் வரிசையோடுதானே நான் வந்தேன் இன்னும் எதற்கு நகை கேட்கிறீர்கள்?’ என்று அந்த பெண் கேட்ட போது ‘வீட்டை விட்டு வெளியே போ’ என்று விரட்டியுள்ளார் .
இதனால் அ ந்த பெண் தன்னுடைய பெற்றோரோரோடு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில்,அந்த கணவன் மீது புகார் கூறினர் .போலீசார் அவரின் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து அந்த கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

“குண்டான மனைவியால்  காண்டான கணவன்”- போலீசில் போட்டுக்கொடுத்த பொண்டாட்டி