“சிறுமிகளைக் கூட விட்டு வைக்காத காசி”.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

 

“சிறுமிகளைக் கூட விட்டு வைக்காத காசி”.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாச படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரை பற்றி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

“சிறுமிகளைக் கூட விட்டு வைக்காத காசி”.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

சில நாட்களுக்கு முன்னர் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், காசிக்கு அரசியல் பலம் அதிகமாக இருக்கிறது என்றும் இதற்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார். கடந்த ஒரு மாத காலமாக காசியின் இந்த மோசடி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவரை பற்றி தினமும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. நேற்று முன் தினம் காசியின் வலையில் விழுந்த ஒரு பெண் மருத்துவர் காசியை பலமுறை விந்து தானம் செய்ய வைத்ததாகவும், அதற்கு கைமாறாக காசி அழைத்து வரும் பெண்களுக்கு அந்த மருத்துவர் கருக்கலைப்பு செய்து வந்தார் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

“சிறுமிகளைக் கூட விட்டு வைக்காத காசி”.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் காசி சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகின்றன. கன்னியாகுமரி மகளிர் காவல்நிலையத்தில் காசி மீது ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். அந்த சிறுமியுடன் 21/2 ஆண்டுகள் நெருங்கி பழகியதாகவும், அவரிடம் பணம் பறிக்க முயன்ற நேரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சிறுமி கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் காசியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அந்த விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.