பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்

 

பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்

பணிவு குறித்து புரியாததால் கமல் நாத்தும், திக்விஜய சிங்கும் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது: நான் எப்போதும் பொதுமக்கள் முன் தலை வணங்குவேன். இதனை முதல்வர் எப்போதும் மண்டியிடுகிறார் என்று காங்கிரஸ் சொல்கிறது. திக்விஜய சிங் மற்றும் கமல் நாத், மக்கள் முன் பணிவு என்பது குறித்து உங்களுக்கு என்னவென்று தெரியும்!

பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்
திக்விஜய சி்ங்,கமல் நாத்

நீங்கள் கர்வம், ஆணவத்துடனும் விளிம்பில் நிறைந்து நிறைந்திருக்கிறீர்கள். மக்களுக்காக மட்டுமே பா.ஜ.க. பணியாற்றும். மக்கள் எனது கடவுள்கள். அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்சினைகள் இல்லை. அதனால்தான் இவை அனைத்தும் நடக்கிறது. அவரது தாழ்மையான தொடக்கங்களை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்
காங்கிரஸ்

ஆனால் மத்திய பிரதேசத்துக்காக என்ன செய்தீர்கள் என்பதை சொல்லுங்க கமல் நாத். வளர்ச்சி பணிக்காக ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்கவில்லை. அவர்கள் நாங்கள் தொடங்கிய அனைத்து வளர்ச்சி பணிகளை கூட நிறுத்தினார்கள். அரசாங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.