காங்கிரஸ் ஆட்சியில் மாநில பட்ஜெட் ரூ.21 ஆயிரம் கோடி.. அதனை ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்த்தினேன்.. சவுகான்..

 

காங்கிரஸ் ஆட்சியில் மாநில பட்ஜெட் ரூ.21 ஆயிரம் கோடி..  அதனை ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்த்தினேன்.. சவுகான்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாநில பட்ஜெட் ரூ.21 ஆயிரம் கோடி அதனை மாமா ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தினேன் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற 28 தொகுதிகளிலும் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து உள்ளதால் காங்கிரஸ் பணியாற்றும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொரு விஷயங்களும் தோல்வி அடைந்தனர், நான் சென்ற எல்லா இடங்களிலும் மக்கள் என்னிடம் வருவார்கள், மாமா (சிவ்ராஜ் சிங் சவுகான்) ஆட்சியை (காங்கிரஸ்) கவிழ்த்து விடுங்கள் என்று கூறினார்கள். நான் விரும்பி இருந்தால் அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சி அமைத்து இருக்க முடியாது.

காங்கிரஸ் ஆட்சியில் மாநில பட்ஜெட் ரூ.21 ஆயிரம் கோடி..  அதனை ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்த்தினேன்.. சவுகான்..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

எங்களை காட்டிலும் ஒரு சில இடங்கள் மட்டுமே அவர்களுக்கு கூடுதலாக இருந்தது. சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை வழங்க தயார் என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் அந்த வாய்ப்பை மறுத்து விட்டோம். முன்னாள் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் ஆட்சியின்கீழ், மாநில பட்ஜெட் ரூ.21,000 கோடி. மாமா அதை ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்தினேன். உங்கள் அரசாங்கத்தில் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி ரூ.98 ஆயிரம் கோடியாக இருந்தது அதனை ரூ.7.07 லட்சம் கோடியாக உயர்த்தினேன். திக்விஜய சிங் ஆட்சியின்போது தனிநபர் வருமானம் ரூ.1,500, அதை மாமா ரூ.80,000மாக உயர்த்தினேன்.

காங்கிரஸ் ஆட்சியில் மாநில பட்ஜெட் ரூ.21 ஆயிரம் கோடி..  அதனை ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்த்தினேன்.. சவுகான்..
திக்விஜய சிங்

சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக ரூ.1,400 கோடி வழங்கப்படும் இதனால் அவர்களின் பணிகள் சீராக நடைபெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை அனைவரும் மாமா என்று பாசமாக அழைப்பர்