மகாபாரதத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கு..

 

மகாபாரதத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கு..

மகாபாரத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங். தனது (காங்கிரஸ்) கட்சியை அழிக்கும்போது நிம்மதி அடைவார் என சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார்க் மாவட்டம் பியோரா சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நாராயண் சிங் பரிவார் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ராஜ்கார்க்கில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.

மகாபாரதத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கு..
திக்விஜய சிங்

அந்த கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங்கை சிவ்ராஜ் சிங் சவுகான் கடுமையாக தாக்கி பேசினார். சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது:

மகாபாரதத்தின் சகுனி போன்றவர் திக்விஜய சிங்… மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தாக்கு..
சகுனி கதாபாத்திரம்

திக்விஜய சிங் மகாபாரதத்தின் சகுனி. அவர் தனது கட்சியை அழிக்கும்போதுதான் நிம்மதி அடைவார். ஒன்றைரை ஆண்டுகளில் காங்கிரஸின் பாவங்கள் நிரம்பியுள்ளன. இது ஜோதிராதித்ய சிந்தியாவால் வெடித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.