விளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..

 

விளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..

அயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக்கி வருகிறார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் இமார்டி தேவியை கமல் நாத் அயிட்டம் என்று கூறியது அம்மாநில அரசியலில் பெரும் பிரளயத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த பா.ஜ.க. நேற்று முன்தினம் கமல் நாத் கண்டித்து 2 மணி நேரம் மவுன போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதினார்.

விளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

அந்த கடிதத்தில் பா.ஜ.க. வேட்பாளர் இமார்டி தேவிக்கு எதிராக அவமரியாதையாக எதுவும் கூறவில்லை. அந்த வார்த்தையை பல சூழல்களில் பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் முதல்வர் சிவ்ராஜ் சிங் இந்த பிரச்சினை விடமாட்டார் போல் தெரிகிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

விளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..
இமார்டி தேவி

உங்களுக்கு என்ன நடந்தது முன்னாள் முதல்வர் கமல்நாத், உங்களுக்கு 74 வயது, பா.ஜ.க.வின் இமார்டி தேவி பற்றி நீங்கள் கூறியதை என்னால் மீண்டும் சொல்ல முடியாது. நாம் ஆட்சேபித்தபோது, அவர் வெட்கமின்றி என்னை உள்பட அனைவரையும் அயிட்டம் என்று அழைத்தார். யாராவது அவர்களின் தாய் மற்றும் சகோதரியை அயிட்டம் என்று அழைக்க முடியுமா, அதனை நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.