மத்திய பிரதேசம் விற்கப்பட்ட மாநிலம் என்ற கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை

 

மத்திய பிரதேசம் விற்கப்பட்ட மாநிலம் என்ற கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை

மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என்ற கூறிய முன்னாள் முதல்வர் கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத், மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என குறிப்பிட்டு இருந்தார். அது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் விற்கப்பட்ட மாநிலம் என்ற கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை
கமல் நாத்

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது குறித்து கூறுகையில், மாநிலத்தின் முதல்வராக ஒராண்டுக்கும் மேல் இருந்தவர் மற்றும் 1980ம் ஆண்டு முதல் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என்று குறிப்பிட்டதால் நான் மிகவும் அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன்.

மத்திய பிரதேசம் விற்கப்பட்ட மாநிலம் என்ற கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை
பா.ஜ.க.

இது மாநிலத்தின் 8 கோடி மக்களை அவமதிப்பதாகும். கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்தார். கமல் நாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மாநிலத்தின் இமேஜை ஆளும் கட்சியான பா.ஜ.க. கெடுக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள அனைவரும் விற்க தயாராக இருப்பதாக டெல்லி மக்கள் கூறுவதால் அங்கு செல்வதற்கு வெட்கப்படுகிறேன் என தெரிவித்தார்.