விநாயகர் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் சிவசேனா மனு

 

விநாயகர் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் சிவசேனா மனு

கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக் கொண்டே வருவதால், பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்றும் ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விநாயகர் சிலை வைக்க ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் சிவசேனா மனு

அரசு விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் 1.5 லட்சம் சிலையை நிறுவி வழிபடுவோம் என இந்து முன்னணி நிர்வாகி சுப்பிரமணியம் கூறினார். அதுமட்டுமில்லாமல், தடையை மீறி சிலை வைப்போம் என்றும் கூறியிருந்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தது.

இந்நிலையில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச்செல்லவும் அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில்தமிழ்நாடு சிவசேனா கட்சியின் தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார். அதில், மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி சிலை வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.