கேரளாவில் பரவும் கொரோனாவை விட கொடிய மர்ம நோய்! ஒருவர் பலி

 

கேரளாவில் பரவும் கொரோனாவை விட கொடிய மர்ம நோய்! ஒருவர் பலி

கேரளாவில் கொரோனாவை விட பயங்கரமான மர்ம நோய் பரவிவருகிறது.

கேரளாவில் கொரோனா பரவலின் புதிய கட்டத்தை நோக்கி மக்கள் பீதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மேலும் அச்சமூட்டும் விதமாக “ஷிகெல்லா” பாக்டீரியா பரவி வருவது கேரள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு கோழிக்கோட்டில் ஒருவர் பலியான நிலையில் அறிகுறிகளுடன் 50க்கும் அதிகமானோர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பரவும் கொரோனாவை விட கொடிய மர்ம நோய்! ஒருவர் பலி

மனித உடல் வெளியேற்றும் கழிவுகள், அவை கலக்கும் தண்ணீர், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகள் மூலமும் பரவும் இந்த “ஷிகெல்லா” பாக்டீரியா, பெரியவர்கள் மட்டுமின்றி ஐந்து வயதிக்கும் கீழ் உள்ள குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.