தேர்தலுக்கு முன் பேஸ்புக்குடன் கூட்டணி வைத்து கையும் களவுமாக பிடிபட்டீர்கள்.. ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

 

தேர்தலுக்கு முன் பேஸ்புக்குடன் கூட்டணி வைத்து கையும் களவுமாக பிடிபட்டீர்கள்.. ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில், இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துகிறார்கள். இறுதியாக அமெரிக்க ஊடகங்கள் பேஸ்புக் பற்றிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளன என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன், அமெரிக்க பத்திரிகையில் பேஸ்புக் தொடர்பான வெளியான செய்தியையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

தேர்தலுக்கு முன் பேஸ்புக்குடன் கூட்டணி வைத்து கையும் களவுமாக பிடிபட்டீர்கள்.. ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

ராகுல் காந்தி டிவிட் செய்த அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவருக்கு டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில் பதிலடி கொடுத்தார். ரவி சங்கர் பிரசாத் டிவிட்டரில், சொந்த கட்சியிலேயே செல்வாக்கு இல்லாதவர்கள், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் உலகத்தையே கட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் பேஸ்புக்குடன் கூட்டணி வைத்து தரவுகளை ஆயுதமாக தவறாக பயன்படுத்தியதற்காக கையும் களவுமாக பிடிபட்டீர்கள்.

தேர்தலுக்கு முன் பேஸ்புக்குடன் கூட்டணி வைத்து கையும் களவுமாக பிடிபட்டீர்கள்.. ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

உண்மை என்னவென்றால் இன்று தகவல் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அணுகல் ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளது. இது இனி உங்கள் குடும்பத்தை தக்கவைத்து கொள்பவர்களால் கட்டுப்படுத்த முடியாது அதனால்தான் வலிக்கிறது. பெங்களூர் கலவரத்தை நீங்கள் கண்டனம் செய்ததை இதுவரை கேட்கவில்லை. உங்கள் தைரியம் எங்கே மறைந்தது? என பதிவு செய்து இருந்தார்.