இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

 

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே இருக்கின்றன. பெண்களும் , குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவருகிறதா என கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இதுபோன்ற கொடூர சம்பவங்களை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது.

இந்தியா முழுவதும், இதற்கு முன் நடைபெற்ற முக்கிய பாலியல் சம்பவங்களில், குற்றவாளிகள் பலரும் அரசியல், சாதி செல்வாக்குகள் காரணமாக சுதந்திரமாக வெளியில் உலவுகின்றனர். ஒரு சில வழக்குகளில் மட்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூரமான பாலியல் வன்முறைகள் இவை.

1.டிசம்பா் 2012 : 23 வயது ‘நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை

2.கடந்த 2015: ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் தந்தையால் கரப்பமாக்கப்பட்டு கொலை.

3.டிசம்பர் 2016 : அரியலூர் நந்தினி தனது காதலர் மணிகண்டன் என்பவரால் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

4.டிசம்பர் 5 2017 : போரூரை சேர்ந்த சிறுமி ஹாசினி அதே பகுதியை சேர்ந்த தஸ்வந்த் என்பரால் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை

5.ஜூன் 5 2017 : சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையத்தில், 15 வயது சிறுமி தனியார் பேருந்தில் 3 ஓட்டுநர்களால் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

6.ஏப்ரல் 2018 : காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது பெண் குழந்தை ஆசிபா கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை

7.பிப்ரவரி 2019 : பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 19 வயது பெண் ஒருவரை தந்தையின் கண்முன்னே 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது.

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

8.பிப்ரவரி 2019 : கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவு செய்தது.

9.மார்ச் 2019 : ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திய ஆறு பேர் கொண்ட கும்பல் அச்சிறுமியை 5 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

10.மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 12 வயது சிறுமி உறவினர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.

இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமைகள்!

11.2019 நவம்பர் 27 : தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை .

12.காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண் தனது காதலனால் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

13.2019 டிசம்பர் 7 : உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண், நடுரோட்டில் எரித்து கொல்லப்பட்டார்.

14.2020 செப்.- உ.பி. ஹர்தாஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்