‘8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’ : சிக்கிய மளிகை கடைக்காரர்!

 

‘8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’ : சிக்கிய மளிகை கடைக்காரர்!

கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். பள்ளி, சாலை, வீடு என எந்த இடத்திலும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனை வழங்கப்படாததே, இது போன்ற சம்பவங்கள் தொடருவதற்கு காரணம் என்ற கருத்து வெகுவாக எழுந்திருக்கிறது.

‘8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’ : சிக்கிய மளிகை கடைக்காரர்!

இந்த நிலையில், சோழவரம் அருகே 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இருக்கும் காரனோடை பகுதியில், மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது கடைக்கு பொருள் வாங்க வந்த 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இது குறித்து மாணவி பெற்றோருக்கு தகவல் அளித்திருக்கிறார். ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த நபரை அடித்து உதைத்ததோடு, பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், ஹரிகிருஷ்ணனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.