மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – கும்பகோணத்தில் கணித ஆசிரியர் கைது
Sep 17, 2021, 14:09 IST1631867974000
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 150 ஆண்டுகளாக பழமையாக இயங்கி வருகிறது இந்த பள்ளி. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர் சேகர். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாணவிகள் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் துணிந்து சென்று பல மனைவிகள் பள்ளி செயலாளரிடம் புகார் அளிக்கின்றனர். இதையடுத்து பள்ளி செயலாளர் வேலப்பன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் சேகர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கணித ஆசிரியரை சேகரை கைது செய்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.