வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் உள்பட 2 பேர் கைது!

 

வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் உள்பட 2 பேர் கைது!

வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் உள்பட 2 பேர் கைது!

சென்னை தாம்பரத்தில் பெண் ஒருவர் மருத்துவர் தீபக் என்பவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் தீபக் மற்றும் அவரின் நண்பர்கள் அத்துமீறியதாக தெரிகிறது. 27 வயதான அந்த பெண் அளித்த புகாரில் மருத்துவர் தீபக் , அவரது உறவினரான ஆனந்த் அமிர்தராஜ் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர். பணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் அதே பெண் மீது திருட்டு புகார் கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதை தொடர்ந்து கைதான 2 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் உள்பட 2 பேர் கைது!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இந்த குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இதனால் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.