மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக பிரமுகர் போக்சோவில் கைது

 

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக பிரமுகர் போக்சோவில் கைது

தர்மபுரி

பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள சின்னம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி. கணவரை இழந்த இவருக்கு, 10ஆம் பகுப்பு படித்து வரும் மாற்றுத் திறனாளி மகள் உள்ளார். இந்த நிலையில், சிறுமி இன்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கோவிந்தராஜ் என்பவர், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக பிரமுகர் போக்சோவில் கைது

இதனிடையே நீண்ட நேரம் ஆகியும் மகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த செல்வி காட்டு பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்து கோவிந்தராஜ் தப்பியோடியுள்ளார். பின்னர் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு விசாரித்தபோது அவர் தனக்கு நிகழ்ந்த கொடுமையை தெரிவித்தார். இதனை அடுத்து, செல்வி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.