12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

 

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடியில் 12 வயது சிறுமியிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடி பொன் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் (29) என்பவர் கடந்த 19.06.2021 அன்று அதை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் நடந்த விவரத்தை தெரிவித்ததின் அடிப்படையில் சிறுமியின் தாயார் செல்வகணேஷிடம் கேட்டபோது அவரை செல்வ கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது

இதனையடுத்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்தார். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி விசாரணை நடத்தியபோது செல்வகணேஷ் பாலியல் தொந்தரவு செய்து தாயாரையும் தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழும், பெண்ணை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியதற்காகவும் செல்வகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.