பாலியல் தொல்லை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 900 முன்னாள் மாணவர்கள் புகார்

 

பாலியல் தொல்லை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 900 முன்னாள் மாணவர்கள் புகார்

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பியுள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

பாலியல் தொல்லை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 900 முன்னாள் மாணவர்கள் புகார்

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் செனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பாலியல் புகார்கள் எழுந்தது. இது குறித்து விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 900 முன்னாள் மாணவர்கள் புகார்

இந்நிலையில் எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு 900-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். அதில், நீண்ட காலமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுவருவதாகவும், பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படாதது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகியுள்ள இக்கடிதம் குறித்து காவல் துறையினர் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.