பெற்றோரை இழந்த +2 மாணவிக்கு பாலியல் தொல்லை… சித்தி கணவர் மீது வழக்குப்பதிவு…

 

பெற்றோரை இழந்த +2 மாணவிக்கு பாலியல் தொல்லை… சித்தி கணவர் மீது வழக்குப்பதிவு…

கன்னியாகுமரி

குமரி அருகே பெற்றோரை இழந்த பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த, சித்தி கணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பெற்றோரை இழந்த இவர், அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தக்கலை அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே வீட்டில், மேக்காமண்டபத்தை சேர்ந்த மாணவியின் சித்தி மற்றும் அவரது கணவர் மகேஷ் (45) ஆகியோரும் வசித்து வந்தனர்.

பெற்றோரை இழந்த +2 மாணவிக்கு பாலியல் தொல்லை… சித்தி கணவர் மீது வழக்குப்பதிவு…

இந்த நிலையில், கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது, தனியாக இருந்த மாணவியை, அவரது சித்தப்பா மகேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்த மகேஷ், இதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்து மாணவி, கடந்த வாரம் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து, குழந்தைகள் நல அமைப்பினர் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.