ஜிம்மில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிடம்… அத்துமீறிய ஜிம் பயிற்சியாளர்!

 

ஜிம்மில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிடம்… அத்துமீறிய ஜிம் பயிற்சியாளர்!

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பாலியல் வழக்கில் சிக்குகின்றனர். இந்த நிலையில், சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் இயங்கிவரும் ஜிம்மின் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார்.

ஜிம்மில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிடம்… அத்துமீறிய ஜிம் பயிற்சியாளர்!

கேம்ப் ரோட்டில் இயங்கி வரும் ஜிம்மின் பின்புற வாயிலை திறந்து உடற்பயிற்சி செய்ய அனுமதித்து வந்துள்ளனர். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட வந்திருந்த பெண் ஒருவரை ஜிம் பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பயிற்சிக்கு வந்த அனைவரையும் கிளம்பச் சொல்லிவிட்டு அந்தப் இளம் பெண்ணை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லி அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையறிந்த பிரேம் ஆனந்த் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து சமாதானம் செய்ய முயற்சி செய்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் பரங்கிமலை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கோடு வருகின்றனர்.