பிரார்த்தனை கூடத்தில் பாலியல் தொழில்… தாயே, மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்!

 

பிரார்த்தனை கூடத்தில் பாலியல் தொழில்… தாயே, மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்!

கன்னியாகுமரி

குமரி அருகே பிரார்த்தனை கூடம் என்ற பெயரில் வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த மதபோதகர் உள்பட 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் லால்ஷைன் சிங்(43). மதபோதகர் ஆன இவர், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்தார். இந்த வீட்டிற்கு அடிக்கடி இளம்பெண்களும், ஆண்களும் சொகுசு கார்களில் வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, ஜெபக்கூடம் என்ற பெயரில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் நித்திரவிளை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த 2 ஆண்கள், 4 பெண்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் ஷைன்லால் சிங்கையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

பிரார்த்தனை கூடத்தில் பாலியல் தொழில்… தாயே, மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்!

அப்போது, பிடிபட்ட ஆண்கள் களியக்காவிளையை சேர்ந்த ஷைன் (34), சிபின் (34) என்பது தெரிய வந்தது. மேலும், பிடிபட்ட 4 பெண்களில் 2 பேர் 19 வயதுடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்களில் இருவர் தாய், மகள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. வறுமை காரணமாக பெற்ற மகளையே தாய் விபசாரத்தில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து, நித்திரவிளை போலீசார், போதகர் லால்ஷைன் சிங், ஷைன், சிபின் மற்றும் 2 பெண்கள் என 5 பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 19 வயதுடைய 2 இளம் பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.