‘பசு மாட்டுடன் பாலியல் உறவு’ : சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை!

 

‘பசு மாட்டுடன் பாலியல் உறவு’ : சிசிடிவி காட்சியால்  வெளிவந்த உண்மை!

பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரின் பசுமாடு அடிக்கடி காணாமல் போயுள்ளது. பசுமாட்டை தேடி அதன் உரிமையாளர் செல்லும் போது அது வேறேதேனும் பகுதியில் நின்று கொண்டிருக்குமாம். இப்படி பல முறை காணாமல் போய் கிடைத்த பசு குறித்து போலீசில் அதன் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் சிசிடிவி கேமிராவை பொருத்தியுள்ளார்.

‘பசு மாட்டுடன் பாலியல் உறவு’ : சிசிடிவி காட்சியால்  வெளிவந்த உண்மை!

இந்நிலையில் சம்பவத்தன்று சிசிடிவி காட்சியில் ஒருவர் மாட்டை சத்தமின்றி ஓட்டி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதில், கைது செய்யப்பட்ட நபர் இரவு நேரத்தில் பசுமாட்டை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் பசுவை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுவதும் தெரியவந்தது.

‘பசு மாட்டுடன் பாலியல் உறவு’ : சிசிடிவி காட்சியால்  வெளிவந்த உண்மை!

இதை தொடர்ந்து மாட்டை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நபர் , பசுவுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வைத்திருந்தது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.