எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்… விரைவில் குணமடைய மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

 

எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்… விரைவில் குணமடைய மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மார்ச் 4 மற்றும் ஏப்ரல் 3ம் தேதிகளில் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று மன்மோகன் சிங்குக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கேள்வி பட்டதும் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, நிதின் கட்கரி என பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்… விரைவில் குணமடைய மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மன்மோகன் சிங்

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில், எங்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி டிவிட்டரில், அன்புள்ள மன்மோகன் சிங் ஜி, நீங்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுக்கு உங்கள் வழிகாட்டுதலும் ஆலோசனையும் தேவை என பதிவு செய்து இருந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்… விரைவில் குணமடைய மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டிவிட்டரில், மன்மோகன் சிங் ஜி விரைவில் குணமடைய நான் பிராத்திகிறேன் என பதிவு செய்து இருந்தார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், இன்று எனது பிரார்த்தனைகள் மன்மோகன் சிங் ஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன். ஆழ்ந்த மரியாதை. அவர் இந்த துன்பத்தை தனது முழு வலிமையுடன் எதிர்த்து போராடி விரைவில் குணமடையட்டும் என பதிவு செய்து இருந்தார்.