சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழப்பு

 

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த  7 பேர் உயிரிழப்பு

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து தூங்கிக்கொண்டிருந்த  7 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு வந்த தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் என மொத்தம்10 பேர் சிறிய அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது சமையல் சிலிண்டரில் கேஸ் கசிவு இருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

கேஸ் முழுவதுமாக கசிந்து அறை முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வாசனை பக்கத்து வீட்டிற்கும் சென்றிருக்கிறது.

தூக்கத்தில் திடீர் என்று எழுந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு இந்த வாசனை அடிக்கவே அவர் பதறியடித்து தன் வீட்டினை செக் பண்ணி பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டில் இருந்து வாசனை வருவதை தெரிந்துகொண்டு, அவர்களை எச்சரிக்கை கதவை தட்டியிருக்கிறார்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்த ஒருவர் கதவை திறப்பதற்காக லைட் வெளிச்சத்திற்காக சுவிட்சை ஆன் செய்திருக்கிறார். அப்போது எழுந்த தீப்பொறி கசிந்திருந்த கேஸ் மீது உரசி பயங்கர சந்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் அறையில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேரும் சிக்கினர்.

தகவல் அறிந்து அஸ்லாலி போலீசார் வந்து 10 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 7 பேர் உயிரிழந்துவிட்டனர்.