“மட்டையாக வச்சி வேட்டையாடிட்டியே..” -சரக்கடித்த பெண்களை குறிவைக்கும் கொலைகாரன்

 

“மட்டையாக வச்சி வேட்டையாடிட்டியே..” -சரக்கடித்த பெண்களை குறிவைக்கும் கொலைகாரன்

பல பெண்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அவர்கள் மட்டையானதும் அவர்களை கொன்ற கொலைகாரனை போலீஸ் கைது செய்தது .

“மட்டையாக வச்சி வேட்டையாடிட்டியே..” -சரக்கடித்த பெண்களை குறிவைக்கும் கொலைகாரன்


தெலுங்கானாவில் ஐதராபாத்தில் முலுகு பகுதியில் வசிக்கும் ராமுலு என்ற 45 வயதான மீது 16 க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளன .மேலும் அவர் மீது பல கொலை வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் அந்த ஹைதராபாத் பகுதியில் அடிக்கடி மது குடித்த பெண்கள் கொலை செய்யப்படுவதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது .அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த கொலை வழக்கு குற்றவாளி ராமுலுதான் இந்த கொலைகளை செய்து வருவதை போலீசார் கண்டறிந்தார்கள் .
அவர்களின் கூற்று படி, ராமுலு கடந்த வாரம் முல்கு மற்றும் யோசுப்குடா பகுதியில் வசித்த வெங்கடம்மா என்ற பெண்ணை அழைத்து சென்று மது வாங்கிக்கொடுத்தார் .பின்னர் அந்த பெண் மது போதை அதிகமாகி மட்டையானதும் அவரிடமிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார் .அதன் பின்னர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தார்
இதேபோல், அவர் பலநகர் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத மற்றொரு பெண்ணை , முலுகுவில் உள்ள ஜப்தா சிங்யப்பள்ளி கிராமத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்கு மது வாங்கி கொடுத்தார் .பிறகு அந்தப் பெண் அதிக போதையில் இருந்தபோது அவரை கழுத்தை நெரித்துக் கொன்றார்.அதன் பிறகு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை யடித்து சென்றார் .அதனால் இந்த தொடர் கொலைகளை செய்த ராமுலுவை மீண்டும் போலீசார் கைது செய்து அவர் மீது இந்த கொலை வழக்கையும் பதிவு செய்தார்கள் .

“மட்டையாக வச்சி வேட்டையாடிட்டியே..” -சரக்கடித்த பெண்களை குறிவைக்கும் கொலைகாரன்