ராசிபுரத்தில் செப். 27 வரை நகைக்கடைகள் இயங்காது!

 

ராசிபுரத்தில் செப். 27 வரை நகைக்கடைகள் இயங்காது!

ராசி புரத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு நகைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தில் செப். 27 வரை நகைக்கடைகள் இயங்காது!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நாமக்கல், ராசி புரம், பள்ளி பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ராசிபுரத்தில் செப். 27 வரை நகைக்கடைகள் இயங்காது!

இந்நிலையில் ராசி புரத்தில் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை நகைக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராசி புரத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.