”வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு”

 

”வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு”

நிலக்கரி விவகாரத்தில் வடசென்னை, தூத்துக்குடியை தொடர்ந்து மேட்டூரிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

”வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு”

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா கரூரை அடுத்த புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற 10 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழகத்தில் 4,52,777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழக வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவது இப்போது தான். நடப்பு நிதி ஆண்டிலேயே 1 லட்சம் இணைப்புகளை வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை திருநெல்வேலியில் நடக்கவுள்ளது. அதில் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிலக்கரி விவகாரத்தில் சென்னை மற்றும் தூக்குடியில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேட்டூரையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து முழுவதுமாக விசாரணைக்குப் பிறகு அதன் அறிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். யார் தவறு செய்தார்கள், எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது, வரும் காலங்களில் அந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

”வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு”

கடந்த ஆட்சி காலத்தில் நிலக்கரி காணாமல் போனது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது என்றும், 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர் தெரிவித்தனர். அப்படி இருக்கும் போது அதன் விசாரணை அறிக்கையை ஏன் வெளியிடவில்லை, யாரை காப்பாற்ற இது போன்று நடந்து கொண்டார்கள்.? கடந்த ஆட்சியில் இந்த முறைகேட்டை மூடி மறைக்க பார்த்தார்கள், அது எடுபடாது.

கரூர் மாவட்டத்திற்கு காவிரி ஆற்றின் குறுக்கே 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் முடிவுற்ற பிறகு அரசாணை வெளியிடப்பட்டு, அதன் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு பணிகள் துவங்கப்படும். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கடந்த ஆட்சி காலத்தில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தூசி தட்டி எடுக்கப்பட்டு 100 சதவீதம் நிறைவேற்றப்படும்” எனக் கூறினார்.