பிரபல பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

 

பிரபல பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

செங்கல்பட்டு அருகே பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆனூர் கிராமத்தில் 1800 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய வீடு ஒன்று உள்ளது. இது பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் பூர்வீக குடியிருப்பு. இந்த குடியிருப்பு பகுதிக்கு வாணிஸ்ரீ மற்றும் அவரது கணவர் கருணாகரன் அவரது மகன் சூரிய வெங்கடேஷ் கார்த்திக் (வயது 32) அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அடிக்கடி வந்து செல்வார்கள். சூரிய வெங்கடேஷ் கார்த்தி பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் . தற்போது கடந்த இரண்டு மாத காலமாக சென்னைக்கு வரமுடியாமல் தடை உத்தரவால் பெங்களூரிலேயே தங்கி மருத்துவம் பார்த்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி அவரது தந்தை கருணாகரன் பெங்களூர் சென்று அவரை அழைத்து வந்துள்ளார் .

பிரபல பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

பெங்களூரில் இருந்து வந்ததால் தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருந்துள்ளார். அவரும் அவரது தந்தையும் தனி வீட்டில் ஆறாம் தேதி முதல் தங்கியுள்ளனர் பெங்களூரில் இருந்து வந்தது முதல் கார்த்திக் மன அழுத்தம் காரணமாகவே காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் பின்பக்கம் உள்ள தாழ்வாரத்தில் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் கார்த்திக். இதனை பார்த்த அவரது தந்தை கருணாகரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் கார்த்திக் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனூர் கிராமத்திற்கு தனது மனைவியுடன் மாதம் ஒரு முறை வரும் கார்த்திக், அந்த கிராமத்திலுள்ள மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார் என்பது குறிப்பிடதக்கது.