இணையத்தை கலக்கும் பாப்- கட்டிங் செங்கமலம்!

 

இணையத்தை கலக்கும் பாப்- கட்டிங் செங்கமலம்!

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் வளர்க்கப்படும் யானை தற்போது இணையத்தையே கலக்கிவருகிறது. அதற்கு காரணம் அதனுடைய ஹேர் கட். குழந்தைகளை போல அழகாக பாப் கட்டிங்கில் தோற்றமளிக்கும் இந்த யானையை அனைவரும் “பாப்-கட் செங்கமலம்” என அழைக்கின்றனர்.

Image

செங்கமலம் 2003 ல் கேரளாவிலிருந்து ராஜகோபாலசாமி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. செங்கமலத்தின் சிகை அலங்காரத்திற்கும் பராமரிப்புக்கும் அதிகமான செலவாவதாக பாகன் ராஜகோபால் கூறுகிறார். யதார்த்தமாக ஒரு வீடியோவில் யானை குட்டிக்கு வித்தியாசமான சிகை அலங்காரத்தினை பார்த்து ஈர்க்கப்பட்ட நான், தன்னுடைய யானைக்கும் வித்தியாசமான சிகை அலங்காரத்தினை முயன்று பார்த்ததாக பாகன் ராஜகோபால் கூறியுள்ளார். செங்கமலத்தினை கோடை காலத்தில் குளிப்பாட்ட 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஷெவர் ஒன்றினையும் ராஜகோபால் தயார் செய்துள்ளார்.

கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை செங்கமலத்தை குளிக்கவைத்து அதனை சுத்தமாக பராமரித்துவருகிறார் பாகன் ராஜகோபால். செங்கமலம் என் குழந்தையை போன்றவள் என்றும், அவரது தனித்துவமான தோற்றத்திற்கு ஏராளமான ரசிகர்கள் அதற்கு தற்போது இருப்பதாகவும் மகிழ்ச்சிப்பொங்க கூறுகிறார் ராஜகோபால்.