முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை வீடியோ எடுத்து அனுப்பவும்- ஆணையர் அறிவிப்பு

 

முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை வீடியோ எடுத்து அனுப்பவும்- ஆணையர் அறிவிப்பு

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் குறித்து ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறையின் வாட்சப் மற்றும் முகநூலில் பதிவிடலாம் என அம்மாவட்ட ஆணையர் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருவோர் கடைகளிலும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை வீடியோ எடுத்து அனுப்பவும்- ஆணையர் அறிவிப்பு

இந்நிலையில் மதுரையில் யாரேனும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் உடனடியாக அவர்கள் இருப்பிடத்துடன் கூடிய புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மதுரை மாநகர வாட்ஸ்அப் குற்ற முறையீட்டு எண்ணிற்கோ (83000-21100) அல்லது Madurai City Police என்ற முகநூல் பக்கத்திலோ தாராளமாக பதிவிடலாம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார். காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என்றும் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.