செல்வன் கொலை : அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண்!

 

செல்வன் கொலை : அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில்  சரண்!

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற 32 வயது இளைஞர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன் விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சொத்து பிரச்சினை காரணமாக உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேல் செல்வனை கொலை செய்ததாக செல்வன் குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.

செல்வன் கொலை : அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில்  சரண்!

மேலும் இந்த கொலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இளைஞர் கொலையில் அதிமுக பிரமுகர் திருமண வேல், கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செல்வன் கொலை : அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில்  சரண்!

இந்நிலையில் தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் திருமண வேல் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேடப்பட்டு வந்த திருமண வேல், முத்து கிருஷ்ணன் இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகத் தூத்துக்குடி எஸ்பி தெரிவித்துள்ளார்.

செல்வன் கொலை : அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில்  சரண்!

குற்றவாளிகளைக் கைது செய்யாமல் கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குற்றவாளிகள் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.