என்னது நான் ஊழல் செஞ்சனா… பொது வாழ்க்கையிலிருந்து போறேன் – செல்லூர் ராஜூ அப்செட்

 

என்னது நான் ஊழல் செஞ்சனா… பொது வாழ்க்கையிலிருந்து போறேன் – செல்லூர் ராஜூ அப்செட்

தான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், தாலிக்கு தங்கம், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

என்னது நான் ஊழல் செஞ்சனா… பொது வாழ்க்கையிலிருந்து போறேன் – செல்லூர் ராஜூ அப்செட்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். இதில் கடுகளவு கூட உண்மையில்லை. ஊழல் ஏதேனும் நடைபெற்றிருப்பதாக நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளத் தயார். ஸ்டாலின் உளறுவதை முதலில் நிறுத்த வேண்டும், மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகளவில் நவீன மருத்துவ வசதிகள் செய்யவேண்டும் என்பதால் பன்னாட்டு கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கும். பிரதமர் துவங்கி வைத்த திட்டம் எப்படி நடைபெறாமல் இருக்கும்?” எனக் கூறினார்.