“தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் பெரியப்பா, சித்தப்பா ஆகிவிட்டார்”

 

“தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் பெரியப்பா, சித்தப்பா ஆகிவிட்டார்”

மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் 1 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்காலத்தில் எந்த நல்ல திட்டமும் கொடுக்கவில்லை. தான் திருடி பிறரை நம்பாதவர்கள். அதனால் எங்கள் ஆட்சியில் ஊழல் என தான் ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் நெருங்குவதால் பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் எம்ஜிஆரை கூறு போடுகிறார். பெரியப்பா எம்ஜிஆர் தான் அரசியலில் பணியாற்ற அறிவுறுத்தியதாக ஸ்டாலின் கூறுகிறார். முரசொலியில் எம்ஜிஆலை இழிவாகவும், வாங்காத கப்பலை வாங்கியதாகவும் சொல்லியவர்கள் எழுதியவர்கள் திமுகவினர்.

“தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் பெரியப்பா, சித்தப்பா ஆகிவிட்டார்”

எம்ஜிஆரை திமுக தலைவர் கலைஞர் இழிவாக பேசிய போது அவர் சித்தப்பா என தெரிய வில்லையா? அவரை கட்சியை விட்டு நீக்கும் போது கலைஞரிடம் சித்தப்பாவை நீக்காதீர்கள் எனக் கூறி ஸ்டாலின் அடம் பிடித்திருக்கலாமே? எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது ஸ்டாலின் பெரியப்பா கட்சியில் சேர்ந்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் பெரியப்பா, சித்தப்பா எனக்கூறுகிறார்.

எந்த தலைவருக்கும், யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்கு உண்டு. ஸ்டாலின் மட்டும் இல்லை, அவர் தந்தையும் ஒரு காலத்தில் எம்ஜிஆரை ஆருயிர் நண்பர், தற்போது அவர் இல்லை எனக்கூறி என்னை தேர்ந்தெடுங்கள் எனக்கூறியுள்ளார். அவர் வந்த பிறகு ஆட்சியை அவரிடம் கொடுப்பேன் என பேசியுள்ளார். எனவே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின். கலைஞரின் பொய்யை நம்பியே அவருக்கு மக்கள் ஓட்டு போடவில்லை. தற்போது எம்ஜியாரை பெரியப்பா, சித்தப்பா எனக்கூறினாலும் முதல்வர் எடப்பாடி தான் முதல்வர் என மக்கள் தீர்மானம் செய்துவிட்டனர். 96.20 சதவீதம் பொங்கல் பரிசை உச்சபட்சமாக வழங்கியுள்ளோம்.

மத்திய அரசு பட்ஜெட்டில் ரேசன் கடை பொருட்களில் விலை உயர்த்தினாலும் நாம் இலவசமாக தான் கொடுக்கிறோம். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநில ரேசன் கடைகளில் தான் பொருட்கள் விலைக்கு விற்கப்படுகின்றன. தமிழகத்தில் அவ்வாறு இல்லை. எவ்வளவு விலை உயர்த்தினாலும் அதற்கான நிதியை மாநில அரசு மத்திய அரசுக்கு வழங்கும்” என உறுதியளித்தார்.