ஸ்டாலினால் 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியுமா? – அமைச்சர் செல்லூர் ராஜூ

 

ஸ்டாலினால் 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியுமா? – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை முத்துப்பட்டியில் கண்மாயை ஆய்வு செய்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது ரவுடி தொழில் அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் பொது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கிராமசபை கூட்டத்தில் பேசுவது முழுவதும் பொய். எங்களது ஆட்சியில் தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகளை தமிழக மக்களுக்காக கொண்டு வந்துள்ளோம். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது

ஸ்டாலினால் 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியுமா? – அமைச்சர் செல்லூர் ராஜூ

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். நான் சவால் விடுகிறேன். திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களே எங்களது ஆட்சியில் என்ன குறை உள்ளது. சட்டம், ஒழுங்கு சரியில்லையா? மின்சார பற்றாக்குறை உள்ளதா? ஏதேனும் திட்டங்கள் செயல்படாமல் இருந்துகொண்டிருக்கின்றதா? என சொல்லுங்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுகின்றேன், 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம்தான் போட்டியிடும் என அறிவிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.