“பேய் ஓட்டுறேன்னு,பெற்றோர் முன்னாடியே ..”பாப்பாகிட்ட பாபா பண்ண வேலைய பாருங்க

 

“பேய் ஓட்டுறேன்னு,பெற்றோர் முன்னாடியே ..”பாப்பாகிட்ட பாபா பண்ண வேலைய பாருங்க


ஒரு சிறுமிக்கு பேயோட்டுவதாக கூறி அந்த சிறுமியை கடுமையாக அடித்து கொலை செய்த இரண்டு மந்திரவாதிகளை போலீசார் கைது செய்தார்கள்.

“பேய் ஓட்டுறேன்னு,பெற்றோர் முன்னாடியே ..”பாப்பாகிட்ட பாபா பண்ண வேலைய பாருங்க

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகேஷ் மற்றும் அவரின் சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் பேயோட்டும் வேலைகள் செய்து வந்தனர் .அப்போது அங்குள்ள ஒரு பெற்றோர் தங்களின் மூன்று வயது மகள் தூக்கத்தில் அடிக்கடி பினாத்துகிறார் என்று கூறி அவரிடம் அழைத்து வந்தனர் .
அப்போது அந்த சிறுமியை பரிசோதித்த அந்த பேயோட்டும் சகோதர்கள் அந்த சிறுமியின் உடலில் தீய சக்திகள் புகுந்துள்ளதாகவும் ,அதனால் அந்த தீய சக்தியை விரட்ட சில பூஜைகள் செய்யவேண்டு மென்று கூறினர் .
அதை உண்மையென்று நம்பிய அந்த பெற்றோர், அந்த சிறுமிக்கு பேயோட்டும் வேலைகள் செய்ய அனுமதியளித்தனர்.அதனால் அந்த மந்திரவாதிகள் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர் .இதனால் அந்த சிறுமி வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார் .ஆனால் அந்த காட்சியை அந்த பெற்றோர் ஒன்றும் சொல்லாமல் ஊமையாய் நின்று வேடிக்கை பார்த்தனர் .பிறகு அந்த சிறுமி வலி பொறுக்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார் .இதனால் அந்த பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றனர் .ஆனால் அங்கு அந்த சிறுமியை பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதும் ,அவர்கள் அந்த மந்திரவதிகள் ராகேஷ் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள்.

“பேய் ஓட்டுறேன்னு,பெற்றோர் முன்னாடியே ..”பாப்பாகிட்ட பாபா பண்ண வேலைய பாருங்க