தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

 

தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

ரயில்வே துறை வங்கிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ,உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களே அதிகம் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆந்திரா, கேரளா மாநிலத்தர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுப் பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் : வேல்முருகன் காட்டம்!

இதனிடையே திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற் சாலையில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கிரேட் 3 தொழில்நுட்ப பணியாளர்கள் 540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பணிகளில் திட்டமிட்டு வட இந்தியர்களை திணிப்பதை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழகத்தில் தமிழ் நடத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “திணிக்காதே திணிக்காதே! தமிழக ஒன்றியப் பணிகளில் வட“இந்தி”யரைத் திணிக்காதே!பறிக்காதே பறிக்காதே  ஒன்றியத் துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே! ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழில் நடத்துயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நெறி அவனவன் ஊரில் அவனவன் வாழ்க என்பதும் தமிழ்நெறிதான்!” என்றும் தனது மற்றொரு பதிவில், “பறிபோகும் தமிழர்களின் வேலைவாய்ப்புகள். தமிழக அரசே தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை இயற்று” என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.